100 சதவீதம் வாக்களிப்பு:  மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்பு..!

பார்வை குறைபாடுடைய  மாற்றுத்திறனாளிகள், தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி  முன்னிலையில் எடுத்துக் கொண்டனர்.


கோவை: 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று (26.03.2024) மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

நிகழ்ச்சியில், பார்வை குறைபாடுடையமாற்றுத்திறனாளிகள் தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடிமுன்னிலையில் எடுத்துக் கொண்டனர். 



இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மாற்றுத்திறனாளிகள் மத்தியில் 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முயற்சியில், சென்னை மாநகராட்சி பல்வேறு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் இருந்துபிரதிநிதிகளை தெரிந்தெடுத்து, அவர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் (பார்வை குறைபாடு, தொழு நோயிலிருந்து மீண்டவர்கள், செவித்திறன் குறைபாடு, லோகோ மோட்டர் குறைபாடு, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம், மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) என 21 வகையான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிரமமின்றி வாக்களிக்க உதவுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...