தாராபுரத்தில் சிவில் இன்ஜூனியரிடம் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

தாராபுரம் போளரையை சேர்ந்த சிவில் இன்ஜினியர் செந்தமிழ்ச்செல்வன் என்பவர் கட்டுமான பணிக்காக காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 லட்சம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேர்தல் பறக்கும் படையினர் தாராபுரம் பகுதியில் நடத்திய சோதனையில் சிவில் இன்ஜினியரிடம் இருந்து பத்து லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தாராபுரம் தேர்தல் பறக்கும் படை நிலை குழு அலுவலர் வெங்கடேசன் (மூலனூர் பிடிஓ) தலைமையில் தாராபுரம் கரூர் ரோடு கொளத்துப்பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த ஒரு காரை சோதனை செய்த போது அதில் ரூ.10 லட்சம் ரொக்கம் இருந்தது.



விசாரணையில் தாராபுரம் போளரையை சேர்ந்த சிவில் இன்ஜினியர் செந்தமிழ்ச்செல்வன்( வயது 27 )கட்டுமான பணிக்காக ரூ.10 லட்சம் ரொக்கம் பெற்று செல்வதாக கூறினார். ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாததால் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.



தாசில்தார் இது குறித்து உதவி தேர்தல் அலுவலர் செந்தில் அரசனுக்கு தகவல் அளித்தார். செந்தில்அரசன் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணத்தை பார்வையிட்டு ரூ.10 லட்சத்தை டிரசரியில் செலுத்துமாறு உத்தரவிட்டார். தாராபுரத்தில் பட்டப்பகலில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...