திமுக, அதிமுக கட்சிகள் மக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி உள்ளது - உடுமலையில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேச்சு

பொன்னேரி, குடிமங்கலம், பூளவாடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் பகுதிகளான பொன்னேரி, குடிமங்கலம், பூளவாடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தாமரை சின்னத்தில் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, கடந்த சில வருடங்களாகவே திராவிட கட்சிகள் அனைத்து திமுக அதிமுக பொதுமக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் திமுக, அதிமுகவினர் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாரத பிரதமர் மோடி எண்ணற்ற பல திட்டங்களை வழங்கியுள்ளார்.



மேலும் தற்போது உள்ள திட்டங்கள் தொடரவும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசினார். வாக்கு சேகரிப்பின் போது, திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி, பொதுச்செயலாளர் வடுகநாதன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தலைவர் குணசேகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், சனுப்பெட்டி ஊராட்சி செயலாளர் ராமலிங்கம் ஒன்றிய துணைச் செயலாளர் நாராயணசாமி மற்றும் பாமக, பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...