அவிநாசி அருகே தொரவலூரில் முனியப்பசாமி கோவில் பொங்கல் விழா – நேர்திகடனாக 500க்கும் மேற்பட்ட கிடாய்களை வழங்கிய பக்தர்கள்

பக்தர்கள் வழங்கிய 500க்கும் மேற்பட்ட கிடாய்களில் 150 கிடாய்களை வெட்டி பக்தர்களுக்கு அன்னதானமாக போடப்பட்டதாக கோட்டை முனியப்ப சாமி கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட தொரவலூர் பகுதியில் அருள்மிகு கோட்டை முனியப்ப சாமி திருக்கோயில் உள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 200 ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் திருவிழா பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த வருடம் பொங்கல் திருவிழா இன்று நடைபெற்றது.



கடந்த 18ஆம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்வுடன் பொங்கல் திருவிழா தொடங்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை சுவாமி கண் திறப்பு மற்றும் கோவில் புகுதல் நிகழ்வு நடைபெற்றது. முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நடைபெற்றது. இதில் பரவலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.



கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் 500க்கும் மேற்பட்ட கிடாய்களை பக்தர்கள் வழங்கி இருப்பதாகவும், இதில் கோவில் அன்னதானத்திற்கு 150க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு 15 ஆயிரம் பேருக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை மறுபூஜையும் சைவ அன்னதானமும் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...