பெரியநாயக்கன்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு 12 அடி ரோஜா மாலையை கிரேன் மூலம் அணிவித்து வரவேற்பு

பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் உடன் இணைந்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு 12 அடி ரோஜா மாலையை கிரேன் மூலம் அணிவித்து 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர்.



கோவை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ இன்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் ஆதரவு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



இதில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது சிங்கை ராமச்சந்திரனுக்கு 12 அடி ரோஜா மாலையை கிரேன் மூலம் அணிவித்து 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர்.



அப்போது பேசிய ராமச்சந்திரன் நான் வெளியூர்காரன் இல்லை. உங்கள் ஊர்க்காரன். நடுத்தர குடும்பத்தைச் சேர்தவன். போன் செய்தால் எடுப்பேன் மிஸ்டுகால் இருந்தாலும் உடனே கூப்பிடுவேன். மத்தியில் யார் பிரதமர் ஆனாலும் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் கோவைக்கு தேவைக்குத் தேவையானதை போராடி பெற்று தருவேன் என்றார்

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...