அதிமுக வேட்பாளரை போன்று அமெரிக்காவில் படிக்கவில்லை - தாராபுரத்தில் திமுக வேட்பாளர் பிரகாஷ் பிரச்சாரம்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் மாதம் ஆயிரம் ரூபாய் வராத பெண்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என திமுக வேட்பாளர் பிரகாஷ் வாக்குறுதியளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட இறைச்சி மஸ்தான் நகர், காமராஜபுரம், பூளவாடி பிரிவு, மாரியம்மன் கோவில், ஐந்து சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன் முன்னிலையில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் மற்றும் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இதுகுறித்து வேட்பாளர் பிரகாஷ் பேசுகையில் நான் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து மொடக்குறிச்சி அரசு பள்ளியில் கல்வி கற்று இவ்வளவு தூரத்திற்கு வந்துள்ளேன். எதிர்க்கட்சி வேட்பாளரான ஆற்றல் அசோக்குமார் அமெரிக்காவில் படித்துவிட்டு அமெரிக்காவில் வாழ்ந்தவர் கிடையாது என்றும் கூறினார்.

மேலும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் மாதம் ஆயிரம் ரூபாய் வராத பெண்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கூறினர். உள்ளாட்சித் துறையில் வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...