கோவையில் மன நலம் பாதிக்கப்பட்ட நபர் பேருந்து முன் பாய்ந்து உயிரிழப்பு – சிசிடிவி காட்சி வெளியீடு

அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக உறவினர்கள் அழைத்து வந்தபோது, மனநலம் பாதிக்கப்பட்ட ஆனந்த் என்பவர் தனியார் பேருந்து முன் பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ஆனந்த் (40). இவருக்கு மன நலம் பாதிப்பு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆனந்த்துக்கு கடந்த 21 ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.



இதனால் சிகிச்சைக்காக அவரது தாய் மற்றும் பாட்டி ஆனந்தை பேருந்தில் அழைத்துச் செல்ல இரவு 9 மணியளவில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளனர். அப்போது பேருந்துக்காக காத்திருந்த போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து முன் ஆனந்த் பாய்ந்தார். இதில் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக மேற்கு போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆனந்த் தனியார் பேருந்து முன் பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...