பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்பிரகாரத்தில் கூலிங் பெயிண்ட் - பக்தர்கள் மகிழ்ச்சி

பேரூர் கோவிலின் பிரகாரத்தை சுற்றி வரும் தரையில் கூலிங் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. நீல நிறத்தில் காணப்படும் இந்த பெயிண்ட் பூசப்பட்ட பகுதியின் வழியாக நடந்து செல்லும் போது பாதங்கள் சுடுவதில்லை என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

புகழ்பெற்ற இந்த கோவிலின் உள்பிரகாரம் கருங்கற்களால் ஆனது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கருங்கற்களால் ஆன பிரகாரத்தை சுற்றி வர முடியாமல் பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மேலும் பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்கள் பலர் கால்கள் சுடுவதால் பிரகாரத்தை சுற்றி வருவதை தவிர்த்து வந்தனர்.



இந்த நிலையில் அண்மையில் தனியார் உபயதாரர் மூலம் பேரூர் கோவிலின் பிரகாரத்தை சுற்றி வரும் தரையில் கூலிங் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. நீல நிறத்தில் காணப்படும் இந்த பெயிண்ட் பூசப்பட்ட பகுதியின் வழியாக பக்தர்கள் நடந்து செல்லும் போது அவர்களின் பாதங்கள் சுடுவதில்லை. இதனால் பக்தர்கள் மன நிம்மதியுடன் பிரகாரத்தை தற்போது வலம் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர் என கோவிலில் பணிபுரிபவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...