தாராபுரத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் தலைமையில் ஐடிஐ கார்னர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் தகவல் கூறியதை தொடர்ந்து இரண்டு நபர்களையும் அழைத்துச் சென்று தாராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி கீரனூர் பகுதியைச் சேர்ந்த ராம்பாலி என்பவரது மகன் தேவேஷ் ராஜக் வயது 32 என்பதும், மற்றொருவர் தாராபுரம் கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாதிக் என்பவரது மகன் யாசர் ஆர்பத் வயது 20 என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...