கோவை ராமநாதபுரத்தில் இன்ஜினியரின் வீட்டில் 41 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை

புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களை அழைத்து சென்று சோதனை நடத்தினர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.


Coimbatore: கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் சிவராம் நகரை சேர்ந்தவர் மன்மதன்(55). திருச்சியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனுராதா(52). இந்நிலையில், கடந்த 23ம் தேதி வீட்டை பூட்டி விட்டு அனுராதா திருச்சி சென்றார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் சொந்த வேலை காரணமாக டார்ஜிலிங் சென்றனர். 

இதனையடுத்து, நேற்று முன்தினம் அவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த வீட்டு வேலைக்கார பெண் சுசீலா என்பவர் செல்போனில் அனுராதாவை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். இதனையடுத்து அனுராதா கோவையில் உள்ள தனது சகோதரரை வீட்டுக்கு சென்று பார்க்கும் படி கூறினார். மேலும் நேற்று (ஏப்ரல்.27) அனுராதா கோவை திரும்பினார். 



வீட்டுக்கு சென்று பார்த்த போது உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 41 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ. 23 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அனுராதா ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீசார் சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதில், கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...