24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் - மத்திய இணையமைச்சர் எல். முருகன்

தேர்தல் ஆணையம் தொழில்நுட்ப கோளாறுகளைத் தவிர்ப்பதற்கான பணியை அதிகரிக்க வேண்டும் என்று நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் உள்ள கேமராக்கள் 20 நிமிடம் நின்றது குறித்து கோவையில் பேட்டி.


Coimbatore:சென்னையிலிருந்து கோவை விமான நிலையம் வந்த மத்திய இணையமைச்சர் எல் முருகன் மேட்டுப்பாளையம் சென்றார். இதற்கு முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்த எல்.முருகன், நேற்று நீலகிரி ஸ்டார்ங்ரூம்(strong room)கேமரா திரை 20 நிமிடம் நின்று விட்டது. தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள். இவ்வாறு தொழில்நுட்ப கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பணியாக இருக்கிறது.

கால சூழ்நிலை என சொல்கிறார்கள், கால சூழ்நிலை வரும் என்பது குறித்து தெரியும், சேலம், நாமக்கலில் இல்லாத வெயில் இங்கொன்றும் இல்லை எந்த காரணம் சொல்லாமல் 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றார்.



எந்தவித ஐயமும் இல்லாதவாறு தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும் என்றவர், பல இடங்களில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு உள்ளது. இதில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் பாஜகவுக்கு வாக்காளர்களின் விடுபட்டுள்ளது என குற்றம் சாட்டியவர், நீலகிரி, கோவை, தென் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நீக்கப்பற்றிருப்பது திமுகவின் தோல்வியை மறைப்பதற்காக எங்களுடைய வாக்காளர்களை நீக்கி இருக்கிறார்கள் என்றார்.

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த காங்கிரஸின் குற்றச்சாட்டிற்கு பதிலத்த எல்.முருகன், வாக்குப்பதிவு இயந்திரம் (Evm machine)ல் எதுவும் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் விளக்கி இருக்கிறது என்றும், உச்ச நீதிமன்றத்திலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்றும் காங்கிரஸ் இன்டி கூட்டணியினர் தோல்வி பயத்தில்இதனை சொல்கிறார்கள் என்றார்.

அயோத்தியில் உள்ள மக்கள் ஒவ்வொருவருடைய எண்ணம் ராமர் கோயில் வேண்டும், 500 ஆண்டுகள் போராட்டம் முடிவுக்கு வந்து அங்கே தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது என்றவர், இந்தியர்களின் ஒவ்வொருவரின் கனவு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அனைவரும் சென்று வழிபடுகிறார்கள் என்றார். வழிபாடு செல்லவில்லை என ராகுல் கூறுவது எதை காட்டுகிறது என்றால் ராமரை வெறுக்கிறாரா? அல்லது இந்து மதத்தை வெறுக்கிறாரா? அல்லது கடவுள்களை வெறுக்கிறாரா? என்பதை தான் காட்டுகிறது என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...