உலகம் முழுவதும் போதைப்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது - பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

விலைவாசி ஏற்றம், மின் கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் மௌன புரட்சியாக பாராளுமன்ற தேர்தல் முடிவில் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்றார்.


Coimbatore:தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் வழங்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளார். இதனையடுத்து பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த 525 வாக்குறுதிகளில் முறையாக எதையும் நிறைவேற்றவில்லை. மக்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். லஞ்ச லாவண்யம் பெருத்து விட்டது. ஜல்லி, மணல் போன்ற கனிம வளங்கள் கடத்தல் அதிகரித்து பல்வேறு சட்டவிரோதம் நடைபெற்று வருகிறது. தமிழகம் ஊழல் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.



விலைவாசி ஏற்றம், மின் கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் மௌன புரட்சியாக பாராளுமன்ற தேர்தல் முடிவில் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். மேலும் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. எப்படி கடிகாரம் ஏற்றுமதியில் சுவிட்சர்லாந்து முதன்மை நாடாக உள்ளதோ, அதேபோல தமிழகம் உலகம் முழுவதற்கும் போதைப்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...