கோவையில் முன் விரோதம் காரணமாக நடைபெற்ற தகராறில் ஆட்டோ டிரைவருக்கு அரிவாளால் வெட்டு

இது குறித்த புகாரின் பேரில், கடைவீதி போலீசார் கதிர்வேல் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.



Coimbatore: கோவை செட்டி வீதி வைசியாள் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(43). ஆட்டோ டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல்(எ) சிங்கான்(40) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல்.27) சுரேஷ்குமார் செட்டி வீதி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கதிர்வேலுக்கும், சுரேஷ்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கதிர்வேல் தகாத வார்த்தைகளால் பேசி ஆட்டோ டிரைவர் சுரேஷ்குமாரை அரிவாளால் வெட்டினார்.

இதில் பின்னந்தலையில் பலந்த வெட்டு காயமடைந்த சுரேஷ்குமாரை அக்கம்பத்தினர் மீட்டு ஆட்டோவில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில், கடைவீதி போலீசார் கதிர்வேல் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

முன்னதாக, நேற்று இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சற்று முன்பு செல்வபுரம் அசோக்நகரில் டூ-வீலர் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கதிர்வேல் குடிபோதையில் கூலி தொழிலாளி சக்திவேல் முத்து(42) என்பவரை உருட்டு கட்டையால் தாக்கி உள்ளார். 

இது குறித்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசாரும் கதிர்வேல் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இவர் மீது ஏற்கனவே அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கோவை காவல் நிலையங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...