டாட்டா பவர் நிறுவனத்திற்கு எதிர்ப்பு - காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறி செயல்பட்டு வரும் டாட்டா பவர் நிறுவனத்தின் திட்ட பணிகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள மூத்தநாயக்கன்வலசு கிராமத்தில் டாட்டா பவர் நிறுவனம் தென்னிலை, பரமத்தி ஆகிய பகுதிகளில் 300க்கு மேற்பட்ட காற்றாலைகளை அமைத்து மின்சாரத்தை கொண்டு வந்து மூத்தநாயக்கன்வலசில் துணை மின் நிலையம் அமைத்து அங்கிருந்து 20 கிலோமீட்டர் தள்ளி உள்ள தூரம்பாடிக்கு உயர்மின் கோபுரத்தை அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு திட்டமிட்டு வருகிறது.



இந்த உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும்போது விவசாய நிலத்தின் மதிப்பு முழுமையாக பறிக்கப்படும், நிலத்தின் மதிப்பை மட்டுமே நம்பி உள்ள விவசாயிகள் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக பறிக்கப்படுவதால் தனியார் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு DTCP, ஊராட்சி மன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார முகமைகளிலும் எவ்வித அனுமதி பெறாமல் நடைபெற்று வந்த பணியை கண்டித்து கடந்த 15-04-2024 நடைபெற்ற தேர்தல் புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தின் போது நிர்வாகத்தின் சார்பில் அனைத்து விதமான அனுமதிகளையும் பெறாமல் பணிகள் தொடங்கப்படாது என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறி தற்போது சட்டவிரோதமாக PAP ஆயக்கட்டு விவசாய நிலத்தில், விவசாயம் அல்லாத பயன்பாடான தொழில் சார்ந்த பணிகளுக்கு, இரும்புகளை கொண்டு வந்து சேகரித்து வைக்கவும், கட்டுமானத்திற்கு தகுந்தார் போல் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.



விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறி செயல்பட்டு வரும் டாட்டா பவர் நிறுவனத்தின் திட்ட பணிகளை நிரந்தரமாக தடை செய்திட கோரி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அனைத்து விவசாயிகள், சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், உழவர் போராளிகள் என 200க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...