குனியமுத்தூரில் ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா திருட்டு

ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா, பிரிண்டர், ஹார்டு டிஸ்க் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் கோஷல் நகரை சேர்ந்தவர் ரிச்சர்ட்சன்(29). இவர் குனியமுத்தூர் பி.கே.புதூரில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி ரிச்சர்ட்சன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் விடுமுறை என்பதால் கடைக்கு செல்லவில்லை.



இந்நிலையில், நேற்று ஏப்ரல்.29 காலை ஸ்டூடியோவின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை சிலர் பார்த்து ரிச்சர்ட்சனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனே விரைந்து வந்து பார்த்தார்.அப்போது உள்ளே இருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், கேமரா, பிரிண்டர், ஹார்டு டிஸ்க் மற்றும்10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடம் வந்து அங்கு பதிவாகி இருந்த 2 கைரேகை பதிவுகளை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...