திருப்பூரில் சமத்துவ கும்மியாட்ட விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்பு

நொய்யல் நதியை பாதுகாக்கும் நோக்கத்துடன், முத்தையன் கோவிலில் நடைபெற்ற சமத்துவ கும்மியாட்ட விழாவில் 100க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு ஆடினர்.


திருப்பூர்: கொங்கு மண்டலம் பல்வேறு கலைகளுக்கு பெயர் பெற்றது. இதில் இதில் மிக முக்கியமாக கும்மியாட்டம் இருந்து வருகிறது. கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் கொங்கு பகுதிகளுக்கு பெயர் பெற்ற கும்மி நடனம் ஆடுவது பலரையும் கவர்ந்து வருகிறது. இதுபோல் பலரும் இந்த கும்மியாட்டத்தை முறைப்படி கற்று அரங்கேற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில்,திருப்பூரில் வேலவன் கும்மி ஆய்வு மையம் சார்பில், நொய்யல் நதியை பாதுகாக்கவும், நொய்யல் ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுத்து இயற்கையை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்சமத்துவ கும்மி அரங்கேற்ற விழா திருப்பூர், தென்னம்பாளையத்தில் உள்ள முத்தையன் கோவில் பகுதியில் நடந்தது.



இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண் கவரும் வகையிலான ஒரே வண்ணத்திலான உடையணிந்து, உற்சாகமாக கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்வில் பங்கேற்று ஆடினர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...