பொள்ளாச்சியில் வாக்கு இயந்திரத்தை பார்வையிட அனுமதி மறுப்பு - போலீசாருடன் திமுக வேட்பாளர் வாக்குவாதம்

வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்றே பின்னரே உள்ளே செல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் போலீசாருடன் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரம் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட சென்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி உள்ளிட்ட தலைமை முகவர் ஆகியோரை போலீசார் அனுமதிக்கவில்லை.



வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்றே பின்னரே உள்ளே செல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர்.



இதனால் போலீசாருக்கும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி வாங்கிய பின்னர் திமுக வேட்பாளர் ஈஸ்வர சுவாமி மற்றும் தலைமை முகவர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.



பின்னர் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்கு இந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதாகவும், தேர்தல் ஆணையம் நல்ல பாதுகாப்பு அளித்து இருப்பதாகவும் தெரிவித்த அவர், வாக்கு இயந்திரம் வைக்கபட்ட இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும் ஈஸ்வரசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...