வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி தொழிலாளி போராட்டம்

என் மீது எந்த தவறும் இல்லாதபட்சத்தில் எஸ்டேட் நிர்வாகம் சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக கூறி நிரந்தர தொழிலாளியாக பணியாற்றும் வீரமணி என்பவர் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி தொழிலாளர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.ஐயர்பாடி எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளராக வீரமணி 55 வயது என்பவர் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பொழுது உடன் வேலை செய்த தனராஜ் என்பவரிடம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக எஸ்டேட் நிர்வாகம் வீரமணி என்பவருக்கு சோக்காஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது.



சோக்காஸ் நோட்டீஸ் வழங்கியதை அடுத்து என் மீது எந்த தவறும் இல்லை. நிர்வாகம் ஒரு தரப்பாக செயல்பட்டு வருகிறதுஎன்று கூறி இன்று காலை ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள உயர் மின்சார கோபுரத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை தொடர்ந்து வால்பாறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், தொழிலாளர் நலத்துறை அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துசமரசம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை மின்சாரக் கோபுரத்தின் மேல் இருந்து இறக்கினர்.

இந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...