பில்லூர் அணையை தூர்வார திட்டம் - மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் விளக்கம்

சிறுவாணி அணையை தூர்வாரும் அவசியம், தற்போதைக்கு இல்லை. பில்லூர் அணையை துார்வார திட்டமிட்டுள்ளோம். கடந்த வாரம்கூட, நகராட்சி நிர்வாக இயக்குனரக அதிகாரிகள் பில்லுார் அணையை தூர்வாருவது தொடர்பாக கேட்டுள்ளனர். இது தொடர்பாக திட்ட அறிக்கை அளித்துள்ளோம் என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: மழை இல்லாததால் நீர் மட்டம் வேகமாக சரிந்துவரும் நிலையில், பில்லூர் அணையை துார்வார நகராட்சி நிர்வாகத்திடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கோவை மக்களுக்கு சிறுவாணி, பில்லூர், ஆழியாறு உள்ளிட்டவை முக்கிய நீர் ஆதாரங்களாக திகழ்கின்றன. தற்போது, மழை இல்லாததால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க உயரம், 50 அடி. நேற்றைய நிலவரப்படி, 11.15 அடியாக நீர் மட்டம் இருந்தது.

இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று முன்தினம், சிறுவாணி அணைப்பகுதிக்கு சென்று, கோவைக்கு கேரளா தரப்பில் இருந்து முறையாக தண்ணீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். இதுகுறித்து, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது, சிறுவாணியில் இருந்து தினமும், 3 கோடி லிட்டர் தண்ணீரை ஜூன் இரண்டாவது வாரம் வரை வழங்கும் வகையில் திட்டமிட்டு, கேரள அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

சிறுவாணி அணையை தூர்வாரும் அவசியம், தற்போதைக்கு இல்லை. பில்லுார் அணையை துார்வார திட்டமிட்டுள்ளோம். கடந்த வாரம்கூட, நகராட்சி நிர்வாக இயக்குனரக அதிகாரிகள் பில்லூர் அணையை தூர்வாருவது தொடர்பாக கேட்டுள்ளனர். இது தொடர்பாக திட்ட அறிக்கை அளித்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...