வெள்ளகோவிலில் சிக்கன் கடையின் பூட்டை உடைத்து கைவரிசை - ரூ.50 ஆயிரம் பணத்துடன் பிடிப்பட்ட திருடன்

நாகப்பட்டினம் மாவட்டம் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து சிக்கன் கடையில் திருடப்பட்ட ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் பகுதியில் இயங்கி வரும் பிரசித்திபெற்ற வீரக்குமார் கோவில் பின்புறம் உள்ள வீரக்குமார் சிக்கன் கடையில் கடந்த ஏப்ரல் 30ஆம்‌ தேதி இரவு மர்ம நபர் ஒருவர் பூட்டிருந்த கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அதிகாலை கடைக்கு வந்த உரிமையாளர் மற்றும் வேலையாட்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து கடையின் உரிமையாளர் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு வெள்ளகோவில் போலீசார் சிக்கன் கடையின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.



மேலும் நாகப்பட்டினம் மாவட்டம் ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் வயது 19 என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.



அவரிடம் இருந்து சிக்கன் கடையில் திருடப்பட்ட ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட மகேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை சிறையில் அடைத்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...