வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதியில் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் கால்பந்து போட்டி

கருமலை பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு கால்பந்து போட்டி ஊசிமலை எஸ்டேட் பகுதியில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் மிக பழமையான பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவர்கள் நீதிபதியாகவும், வழக்கறிஞராகவும், மருத்துவராகவும், உயர் அரசு பதவிகளில் வகித்து வருகிறார்கள். இங்கு படித்த மாணவ, மாணவியர்கள் இந்த அறக்கட்டளை தலைவர் எம்.மாதவன், செயலாளர் எஸ்.சிங்கார முத்து, பொருளாளர் பி.ருக்குமணி ஆகியோர்கள் whatsapp குழு மூலம் இணைந்து கருமலை பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை அமைக்கப்பட்டு இந்த அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு ஊசிமலை எஸ்டேட் பகுதியில் கால்பந்து போட்டி நடைபெற்றது.

கால்பந்து போட்டியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர் மருத்துவர் துரைக்கண்ணன் செயலாளர், எஸ்டேட் மேலாளர் செல்வராஜ், அன்பு சேகர் அன்புராஜ், ஊசிமலை எஸ்டேட் ஒர்க்கர்ஸ் கமிட்டி பழனிச்சாமி, வால்பாறை சிடி செல்வகுமார், முகமது கனி, செல்வகுமார், ஆமோஸ் பரமசிவம், சௌந்தர்ராஜ், ஜான் சரவணன் மற்றும் ஊசிமலை முன்னாள் ஆசிரியர் கலைமணி, இந்நாள் ஆசிரியர் உதயகுமார், குட்வின் ஆசிரியர் மற்றும் அமுதா, எஸ்டேட் பொதுமக்கள் கலந்துகொண்டு பெரியவர்கள், குழந்தைகள் என்று கால்பந்து போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் பரிசுகளும் வழங்கி சிறப்பித்தனர்.



இந்த அறக்கட்டளையின் தலைவர் மாதவன் கூறுகையில் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி இந்த முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் அறக்கட்டளை துவக்கப்பட்டு உள்ளது. கருமலை பகுதியில் இருந்து வெளியூர் சென்ற மக்களுக்கும், கருமலை பகுதியில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவர்களுக்கும் உதவி செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உதவிகளும், மருத்துவ உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...