தாராபுரத்தில் 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - பெண் உட்பட இருவர் கைது

தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு சட்ட விரோதமாக புகையிலை பொருள்களை விற்பனைக்கு எடுத்து வந்த சவுதா கனி என்ற பெண்ணையும், முகமது ரஃபீக் என்ற நபரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 12 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தாராபுரம் நகரின் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சவுதா கனி வயது 35, இவரது கணவர் சையது இப்ராகிம். மேலும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் வயது 47 என்ற நபரும் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர். சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண் உட்பட இரண்டு பேரையும் தாராபுரம் காவல் உதவியாளர் சிவராஜ் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது சட்டவிரோதமாக புகையிலை பொருள்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி சட்ட விரோதமாக புகையிலை பொருள்களை விற்பனைக்கு எடுத்து வந்த சவுதா கனி என்ற பெண்ணையும் முகமது ரஃபீக் என்ற நபரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...