கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டி

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரம் பேர் கலந்துக்கொண்டனர்.


கோவை: கோவை டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் இந்திய சிலம்பம் அசோசியேசன் சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண்கள் உள்பட சுமார் ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர்.



போட்டி நிகழ்வுகளில் ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, சித்திரை சிலம்பம், வாள் வீச்சு மற்றும் சிலம்பு சண்டை போன்ற பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.



வீரர்களும் வீராங்கனைகளும் அவரவர் கலைக்கு ஏற்றவாறு சிலம்பத்தை சுழல திறமையை நிரூபித்தனர்.



வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிலம்பாட்ட வீரர்களுக்கு தெற்காசியா மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகளும் கிடைத்தன.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...