உடுமலையில் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

உடுமலை நகரப் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 14.797 கிலோ கிராம் அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை வாஸ்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உடுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது உடுமலை நகரப் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கட்டாராம் சவுத்ரி(38), சுரேஷ்குமார்(23), தயாராம் (23), சாந்தாராம்(20), உடுமலை தாலுக்கா உரல் பட்டியைச் சேர்ந்த சுரேஷ்(32) ஆகியோர் கணேஷ், கூலிப், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட 14.797 கிலோ கிராம் அளவிலான போதை வாஸ்துக்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போதை வாஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...