இணைய சேவை குறைபாட்டால் தாராபுரம் தலைமை தபால் நிலைய சேவை பாதிப்பு

இணைய சேவை குறைபாடு காரணமாக நேற்றிலிருந்து தலைமை தபால் நிலையத்திலிருந்து எந்த ஒரு பதிவு தபால்களும், இதர சேவைகளும் நடைபெறாமல் உள்ளது. இணைய சேவையில் குறைபாடு உள்ளதாக தலைமை தபால் நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் தலைமை தபால் நிலையத்திலிருந்து தினசரி ஏராளமான பதிவு தபால்கள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இணைய சேவை குறைபாடு காரணமாக நேற்றிலிருந்து தலைமை தபால் நிலையத்திலிருந்து எந்த ஒரு பதிவு தபால்களும், இதர சேவைகளும் நடைபெறாமல் உள்ளது.

இதற்கு இணைய சேவையில் குறைபாடு உள்ளதாக தலைமை தபால் நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இணைய சேவை குறைபாடுகள் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் அரசு நிறுவனங்களில் உயிரோடு பாரத் சென்சார் நிகாம் லிமிடெட் கட்டுப்பாட்டில் இணைய சேவைகள் தாராபுரம் பிஎஸ்என்எல் அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.

இணையத்தில் அடிக்கடி குறைபாடுகள் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள். இதனால் டிஜிட்டல் இந்தியா சேவை முழுமையாக முடங்கி விட்டது. அரசு நிறுவனம் மோசமான இணைய சேவையை சந்திப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். விரைவில் பிஎஸ்என்எல் நிர்வாகம் இணைய சேவையை சீர் செய்யுமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...