வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆலோசனை கூட்டம்

வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் குட்டைகளில் சேரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சிறுதுளி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் உள்ள குட்டைகளில் சேரும் கழிவுநீரினை சுத்திகரிப்பதற்காக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ஆலோசனை கூட்டம் மே 6ஆம் தேதி சிறுதுளி தலைமையில் நடந்தது. ஆர்.எஸ். கிருஷ்ணஸ்வாமி, உயர்மட்ட குழு சார்பில், நிலையத்தை பற்றியும் அதன் நோக்கத்தையும் விரிவான விளக்கம் அளித்தார். நித்திலேஷ், Apta Solvics மூலமாக வடிவமைப்பு மற்றும் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவான கண்ணோட்டத்தை வழங்கினார்.

மாநகராட்சி அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வெள்ளக்கிணறு கவுன்சிலர், விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், அண்ணாமலை ஸ்டோர்ஸ், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெள்ளக்கிணறு & உருமாண்டம்பாளையம் குடியிருப்பாளர்கள், எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் எல்டிடி, மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ், காட்டன் சிட்டி டெவலப்பர்ஸ், அபெக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் சிறுதுளி ஊழியர்கள் பங்கேற்றனர். நிலையத்தின் அமைப்பு மற்றும் பராமரிப்பு ரீதியாக செய்யும் படி விவாதங்கள் நடைபெற்றது மற்றும் நிலையை பராமரிப்பதற்கு அவர்களின் பங்களிப்பு பற்றி பேசப்பட்டது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...