பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற மக்கள் கோரிக்கை

பெரியநாயக்கன்பாளையத்தில் புதியதாக ரூ.115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று (மே.8) இரவு மழை பெய்தது. இதனால் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் புதியதாக 115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.



இந்த தண்ணீர் வெளியேற போதுமான வழியில்லை. இதனால் இன்று (மே.9) இந்த பாலத்தின் மீது பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து பாலத்தின் மேல் உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...