கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் - அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

தங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நகர அமைப்பு அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்து காய்கறிகளை விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர்.



இந்த மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று (09-05-2024) காலை 10 மணியளவில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அதிகாரிகள் தொடங்கினர்.



அப்போது அங்கு வந்த வியாபாரிகள் தங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அங்கு வந்த நகர அமைப்பு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்து அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் கொடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்குகிறது என்று தெரிவித்தனர். அதற்கு எங்களுக்கு அது போன்ற நோட்டீஸ் எதுவும் கொடுக்கவில்லை என்று வியாபாரிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...