உடுமலை அமராவதி அணையில் நீர்வரத்து பூஜ்ஜியம்; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி அணையில் நீர் வரத்து பூஜ்ஜியம் ஆன நிலையில், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான மறையூர், காந்தளூர், தூவானம் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை பெய்த காரணத்தால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக இருந்து வந்தது.



இந்த நிலையில், தற்பொழுது போதிய மழை பொழிவு இல்லாத காரணத்தால் அணைக்கு கடந்த சில தினங்களாகவே நீர்வரத்து குறைந்து வந்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி பூஜ்ஜியம் ஆனது. இதனால் அணையின் பெரும்பாலான பகுதிகள் வறண்டு பாறைகள் தெரியும் அளவில் உள்ளது. தற்சமயம் அமராவதி அணையின் மொத்த 90 அடியில், தற்போது 39.40 அடியாக உள்ளது. இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...