கோவை சாய்பாபா காலனியில் குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டிய தந்தை கைது

கோவை சாய்பாபா காலனியில், மதுபோதையில் தனது குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டிய பச்சையன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை சாய்பாபா காலனி அண்ணா நகரைச் சோ்ந்தவா் பச்சையன் (39), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆா்த்தி. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், பச்சையன் அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு சென்று தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. சில தினங்களுக்கு முன்பு அவருக்கும், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால், ஆா்த்தி அவரைப் பிரிந்து மதுரையில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு சென்று விட்டாா். குழந்தை பச்சையனுடன் இருந்தது. 

இந்நிலையில், வியாழக்கிழமை ஆா்த்தியை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசிய பச்சையன், கோவை வருமாறு அவரை அழைத்துள்ளாா். அதற்கு அவா் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த பச்சையன், நீ வரவில்லை என்றால் குழந்தையைக் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளாா். இதில், பயந்துபோன ஆா்த்தி, சாய்பாபா காலனியில் வசிக்கும் தனது பெரியம்மாவிடம் விவரத்தை கூறி நேரில் சென்று குழந்தையை மீட்குமாறு கூறியுள்ளாா்.

இதையடுத்து, ஆா்த்தியின் பெரியம்மா பொன்னி (50) சிலரை அழைத்துக் கொண்டு பச்சையன் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்த குழந்தையை மீட்டாா். இது குறித்து பொன்னி அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிந்து பச்சையனைக் மே.24 கைது செய்தனா்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...