நெகமம் காவல் நிலைய எல்லையில் 270 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது

நெகமம் காவல் நிலைய எல்லையில் பறிமுதலாகிய 270 கிலோ தடையிடப்பட்ட புகையிலை பொருட்கள்; போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர்.


கோவை: போதைப்பொருள் இல்லா கோவையை உருவாக்கும் பொருட்டு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று (25.05.2024) நெகமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் பேரில், போளிகவுண்டன்பாளையம் அருகே வாகன தணிக்கை செய்த போது நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் ஆல்வின்(30), கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது மகன் சர்ஃபுதீன்(38), அனிஃபா மகன் இஸ்மாயில் (29), பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் இமானுவேல் (38) மற்றும் துரைப்பாண்டியன் மகன் பாலசுப்பிரமணி(47) ஆகிய 5 பேரை கைது செய்தனர். 

பின்னர் அவர்களிடமிருந்து ரூ. 3,00,000 மதிப்புள்ள 270 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனம்-1 மற்றும் ரூ. 1,99,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...