கோவை கொங்கு நகரில் ரூ.10 கோடி மதிப்பிலான இடம் மீட்பு

கோவையில் கொங்கு நகரில் ரூ.10 கோடி மதிப்பிலான 39 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 62வது வார்டு ராமநாதரபுரம் அருகே கொங்கு நகர் உள்ளது. இங்கு கடந்த, 1972ம் ஆண்டு கோவை நகராட்சியாக இருந்தபோது, கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் ஒன்றுக்கு, 8.49 ஏக்கர் இடத்தில், 84 மனைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 

பொது பயன்பாட்டிற்கென, 70 சென்ட் மற்றும், 14 சென்ட் இடம் இரண்டு இடங்களில் ஒதுக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அவை தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சில இடங்களில் திறந்த வெளியாகவும், சில இடங்களில் கட்டடங்களாகவும் காணப்படுகிறது.

மேலும், ஒப்புதல் வரைபடத்தில் உள்ள, 30 அடி மற்றும் 40 அடி ரோடும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை மீட்டு, பொது பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம், பல்வேறு தரப்பினரும் மனு அளித்திருந்தனர். 

இந்நிலையில், மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த பிரபாகர் தலைமையிலான அலுவலர்கள், நேற்று மே.24 ஆக்கிரமிப்பை மீட்டனர். 14 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்துக்கான கேட்டை பூட்டி, 'சீல்' வைத்தனர். 

மற்றொரு பகுதியில் இருக்கும், 70 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தில் காலியாக இருந்த, 25 சென்ட் இடத்தை மீட்டு, அந்த இடத்தில் மாநகராட்சி அறிவிப்பு பலகை வைத்தனர். 

மீதமுள்ள ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க, மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்படவுள்ளது. தற்போது ரூ.10 கோடி மதிப்பிலான, 39 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தை மீட்டுள்ளோம். மீதமுள்ள இடமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு, நோட்டீஸ் வழங்கி மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...