கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம்

வாக்கு எண்ணிக்கையின்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியைத் தவிர, வேறு சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவர்கள் செல்ல அனுமதி கிடையாது என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று மே.27 நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது, கோவை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறகிறது. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 7 மேஜைகள் அமைக்கப்படவுள்ளன.

கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூா், சூலூா் ஆகியதொகுதிகளுக்கு தலா 14 மேஜைகள், பல்லடம் தொகுதிக்கு 18 மேஜைகள், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு 20 மேஜைகள் என மொத்தம் 101 மேஜைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியைத் தவிர, வேறு சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவர்கள் செல்ல அனுமதி கிடையாது.



ஒவ்வொரு மேஜைக்கும் வேட்பாளருக்கு ஒரு முகவா் என்ற வீதத்தில் வாக்கு எண்ணும் முகவா்கள் வேட்பாளா்களால் நியமிக்கப்படவேண்டும். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையில் இருந்து வாக்கு எண்ணிக்கையை அவா்கள் பார்வையிடலாம்.

வாக்குகள் எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மையத்துக்கு இடமுகவா்கள் தங்களின் அடையாள அட்டையுடன் வரவேண்டும். கைப்பேசி, ஐ பேட், மடிக்கணினி உள்ளிட்டவை எடுத்துச் செல்ல அனுமதியில்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தில் முகவா்கள் ஏதேனும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தோ்தல் ஆணையத்தின் அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...