பிள்ளையார்புரத்தில் 5000 மரக்கன்றுகள் நட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு பொதுமக்களுக்கு அழைப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வரும் ஜூன் 1ஆம் தேதி, பிள்ளையார்புரத்தில் 5,000 மரக்கன்றுகள் நடவுள்ளோம். இதில் விருப்பம் உள்ள பொதுமக்கள் பங்கேற்கலாம் என்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் அண்மையில் வெளியிட்டுள்ள காணொளியில், மழைக்காலம் துவங்கியிருக்கிறது. இது, மரக்கன்றுகளை நடுவதற்கு நல்ல வாய்ப்பு. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் 27 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளோம். வனத்துறை அனுமதி பெற்று, நிலத்தை பண்படுத்தி வைத்துள்ளோம்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வரும் ஜூன் 1ஆம் தேதி, பிள்ளையார்புரத்தில் 5,000 மரக்கன்றுகள் நடவுள்ளோம். பொதுமக்கள் பங்கேற்கலாம்.

வாய்ப்பு இருப்போர், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு வரலாம். இல்லாவிட்டாலும் இங்கேயே ஏற்பாடு செய்யப்படும். பசுமை காக்கும் முயற்சியில் கரம் கோர்க்க விரும்புவோர் இணையலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...