கோவை காந்திபுரத்தில் பழக்கடையில் ரூ.10,000 திருடிய 17 வயது சிறுவன் கைது

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் முத்துவேல் என்பவருக்கு சொந்தமான பழக்கடையில் ரூ.10,000 ஆயிரம் பணத்தை திருடிய ஏற்காட்டை சேர்ந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைத்தனர்.


கோவை: கோவை ரத்தினபுரி சம்பத் தெருவை சேர்ந்தவர் முத்துவேல்(55). இவர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சங்கர் என்பவர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி கல்லாவில் ரூ.10 ஆயிரம் பணத்தை வைத்து விட்டு செல்வதாக சங்கரிடம், முத்துவேல் கூறிவிட்டு சென்றார்.

மறுநாள் காலையில் சங்கர் போன் செய்து கடை உரிமையாளர் முத்துவேலிடம், பக்கத்து கடையில் வேலை செய்யும் 17 வயது சிறுவன் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுவன் பணம் திருடியது உறுதியானது. இருவரும் அவரை தேடி வந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று மே.30 சிறுவன் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக முத்துவேலுக்கு தெரியவந்தது.

அங்கு சென்று அந்த சிறுவனை பிடித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பணம் திருடியது சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைத்தனர். அவனிடம் இருந்து ரூ.1,700 பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...