கோவை மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு 2வது நாளாக சிகிச்சை

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நீர்ச்சத்து உணவுகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. யானையின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கிரேன் மூலமாக காட்டு யானை தூக்கி நிற்க வைக்கப்பட்டது.


கோவை: கோவை மருதமலை அடிவார வனப்பகுதியில் நேற்று (30.05.2024) காலை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானை குட்டியுடன் கண்டறியப்பட்டது. நேற்று முழுவதும் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று (31.05.2024) காலை முதல் குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நீர்ச்சத்து உணவுகள் கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர்.



யானையின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கிரேன் மூலமாக காட்டு யானை தூக்கி நிக்க வைக்கப்பட்டது.

மேலும் அதிக அளவு தண்ணீர் யானை மீது பீச்சி அடிக்கப்பட்ட நிலையில், சோர்வாக காணப்பட்ட யானை மீண்டும் உடல் நலம் தேறி வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...