கோவை டிவிஎஸ் நகர் ரோட்டில் அரசு ஊழியர் மீது தாக்குதல் - காவல்துறை விசாரணை

வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் அரசு போக்குவரத்து கழகத்தில் டிராபிக் கண்ட்ரோலராக பணியாற்றும் தீபக் வில்சன் என்பவர் மீது காரில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை விளாங்குறிச்சி சேரன்மாநகரை சேர்ந்தவர் தீபக் வில்சன் (41). அரசு போக்குவரத்து கழகத்தில் டிராபிக் கண்ட்ரோலராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மே.30 தனது நண்பர் பொன்நிலவன் என்பவருடன் பைக்கில் கணுவாயில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது டிவிஎஸ் நகர் ரோட்டில் சென்றபோது, பின்னால் வந்த கார் அவர்களை முந்தி செல்ல முயன்றது. இதில் வழிவிடுவதில், காரில் வந்தவர்களுக்கும், தீபக் வில்சனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காரில் இருந்து இறங்கி வந்த 5 பேர் தகாத வார்த்தைகளால் பேசி தீபக் வில்சனை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.

பின்னர் இதுகுறித்து அவர் கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...