கோவை கோட்டைமேடு பகுதியில் திமுகவினர் மட்டன் பிரியாணி வழங்கி கொண்டாட்டம்

திமுக வேட்பாளர் ராஜ்குமார் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருவதால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி, லட்டு வழங்கி அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


கோவை: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 38 தொகுதிகளில் திமுக., முன்னிலை வகித்து வருகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரனை விட திமுக வேட்பாளர் ராஜ்குமார் 28,000 மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

இந்த நிலையில் கோவையில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் இன்று ஜூன்.4 திமுகவினர் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோட்டைமேடு பகுதியில் திமுகவினர் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரியாணி வழங்கும் போது அருகில் ஆடுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இன்று ஜூன்.4 கொண்டாடினர். பின்னர் பொதுமக்களுக்கும் பேருந்து நிலையத்தில் பஸ்ஸில் உள்ளவர்களுக்கும் லட்டு கொடுத்தனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...