திமுக அரசின் சாதனைக்கு கிடைத்த வெற்றி - பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி பெருமிதம்

பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஈஸ்வரசாமி தொடர்ந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். பொள்ளாச்சி தொகுதியில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த ஈஸ்வரசாமி மற்றும் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்கள் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.



பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவது உள்ளிட்ட கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், இலவச பேருந்து பயண திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாலும் முதல்வரின் முத்தான திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் ஈஸ்வரசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...