கோவையில் இன்டெக் 2024 சர்வதேச இயந்திரவியல் கண்காட்சி துவங்கியது

கோவை பீளமேடு அருகே கொடிசியா வளாகத்தில் ஜூன் 6-10 தினங்களில் இன்டெக் 2024 சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழிற்கண்காட்சி நடந்து வருகிறது. சிறப்பு விருந்தினர்கள் டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் தலைவர் தினேஷ், சி.ஐ.ஐ. சதரன் ரீஜன் தலைவர் டாக்டர் நந்தினி ராமசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


கோவை: கோவை பீளமேடு அடுத்துள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜூன் 6-ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் இன்டெக் 2024சார்பில் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழிற்கண்காட்சியின் துவக்க விழா இன்று ஜூன்.6 காலை நடைபெற்றது.

இக்கண்காட்சியானது ஜூன் 6-ம் தேதி முதல் 10ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 அளவில் கொடிசியாவில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிர்வாக தலைவர் ஸ்ரீ தினேஷ், கௌரவ விருந்தினர் சி. ஐ. ஐ. சதரன் ரீஜன் தலைவர் டாக்டர். நந்தினி ராமசாமி ஆகியோர் கலந்து துவக்கி வைத்தனர்.

இந்த மாபெரும் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சியில் உலகம் முழுவதிலிருந்து 495 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது. மேலும் தொழிற்காட்சியில் தைவான், சீனா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மற்றும் அமெரிக்கா, இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் 495 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...