கோவை மத்திய சிறையில் கைதியிடம் இருந்து 9 கிராம் கஞ்சா பறிமுதல் - போலீசார் விசாரணை

மத்திய சிறையில் நேற்று போலீசார் நடத்திய ஆய்வில் வால்மேடு பிளாக்கில் உள்ள 3வது அறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதி ரஹீம்(32) என்பவரிடம் இருந்து 9 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டனை மற்றும் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு அடிக்கடி போலீசார் சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி, சிறைக்குள் போதைப்பொருள் பயன்பாடு உள்ளதா? செல்போன் உபயோகப்படுத்துகின்றனரா? என போலீசார் சோதனை செய்தனர்.

இந்நிலையில், சிறைக்குள் நேற்று ஜூன்.6 போலீசார் சோதனை நடத்தினர். அதில், வால்மேடு பிளாக்கில் உள்ள 3வது அறையில் கைதி ஒருவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் தண்டனை கைதியான கோவையை சேர்ந்த ரஹீம்(32) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 9 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் இது குறித்து கோவை மத்திய சிறை ஜெயிலர் சரவணகுமார், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ரஹீம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...