கோவையில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளில் இந்தியன் வங்கி மற்றும் தென் மத்திய ரயில்வே அணிகள் சாம்பியன்

கோவை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 57-வது நாச்சிமுத்து கவுண்டர் மற்றும் 21-வது சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி மற்றும் பெண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.


கோவை: கோவையில் வஉசி உள்விளையாட்டு அரங்கில் 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் மற்றும் 21-வது சிஆர்ஐ பம்ப்ஸ் மகளிர் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் கடந்த ஜுன் 5-ம் தேதி துவங்கி நேற்று வரை 5 நாட்களுக்கு நடைபெற்றது.



இதில் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற 8 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணியும் விளையாடிது.



இதில் ஆண்கள் பிரிவில் சென்னை - வருமானவரி அணி, சென்னை- இந்தியன் வங்கி அணி, பெங்களூரு-பாங்க் ஆஃப் பரோடா அணி, லக்னோ-உத்திரபிரதேச போலீஸ் அணி, புது தில்லி-மத்திய செயலக அணி, சென்னை- லயோலா அணி, திருவனந்தபுரம் - கேரளா மாநில மின்சார வாரிய அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணிகள்.



பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் -கேரளா மாநில மின்சார வாரியம் அணி, மும்பை-மத்திய இரயில்வே அணி, மும்பை-மேற்கு இரயில்வே அணி, சென்னை-தென்னக ரயில்வே அணி, சென்னை-ரைசிங் ஸ்டார் அணி, கெல்கத்தா-கிழக்கு இந்திய அணி, செக்கந்திராபாத் - தென் மத்திய இரயில்வே அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் உட்பட 8 அணிகள் பங்கேற்றது.



57-வது நாச்சிமுத்து கவுண்டர் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது, இரண்டாம் இடம் பெற்ற வருமான வரி அணிக்கு பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர். என். மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த பேங்க் ஆஃப் பரோடா அணிக்கு பரிசாக ரூ.20 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு ரூ.15 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.



பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற தென் மத்திய இரயில்வே அணி அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற தென்னக இரயில்வே அணிக்கு பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு பரிசாக ரூ.15 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த கிழக்கு இரயில்வே அணிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் இத்தொடரில் சிறப்பாக விளையாடிய தென்னக இரயில்வே அணியின் வீராங்கனை ரஷி கோத்தானி என்ற வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...