துடியலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்காக இலவச கண் சிகிச்சை முகாம்

பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் மக்களுக்காக தி ஐ பவுண்டேசன் சார்பில் சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதியில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் கோவையில் பல்வேறு இடங்களில் இருந்து மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் வந்து இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர்.



இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர்கள் ஒன்றிணைந்து நலச்சங்கம் உருவாக்கி தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு ஈடாக தூய்மையாகவும், சுற்றிலும் பல வகையான செடிகளை நட்டும், ஆரோக்கியம் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றியுள்ளனர். கோயமுத்தூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த குடியிருப்பு முதலிடம் பெறுவதற்காக தகுதியை பெற்றுள்ளது.

மேலும் ஒவ்வொரு வீடுகளில் துணி காயபோடுவதற்கு கூட கம்பிகள் கட்டப்பட்டு இந்த அடுக்குமாடி குடியிருப்பை தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.



இதனையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் மக்களுக்காக தி ஐ பவுண்டேசன் சார்பில் சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதனை நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் வி.கே.வி.கார்த்திகேஸ்வரி சுந்தர்ராஜ், முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார்.

தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் நிர்வாக பொறியாளர் மாடசாமி, துணை நிர்வாக பொறியாளர் சுதர்சன், சமுதாய வளர்ச்சி உதவியாளர் விஸ்வேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் நலச்சங்க துணைத்தலைவர் சந்தோஷ்குமார், ரஷ்யா, மாலினி, முனுசாமி, சபரிமனோ, காவேரி, இந்திராணி, நிர்மலா, சாந்தி, சமுத்திரவள்ளி உள்ளிட்ட நிர்வாகிகள், குடியிருப்பு வாசிகள் கலந்துக்கொண்டனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...