கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என அறிவிப்பு

நிர்வாக காரணத்தால் கோவை மாநகராட்சியில் நாளை(11.06.24) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என்று கோவை மாநகராட்சி தரப்பில் இன்று ஜூன்.10 தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் காலை 10 மணி முதல் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.இக்கூட்டத்தில் மேயரிடம் கோவை மாநகராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரில் வந்து வழங்க முடியும்.

இந்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு மேயரால் வழங்கப்படும் என்பதால் இதில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக வழங்குவர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் கடந்த 2 மாதங்களாக கோவை மாநகராட்சியில் இந்த கூட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில், தேர்தல் முடிவடைந்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் முடிவுக்கு வந்துள்ள நிலையில் நாளை (11.06.2024) இந்த கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிர்வாக காரணத்தால் நாளை இந்த கூட்டம் நடைபெறாது என கோவை மாநகராட்சி தரப்பில் இன்று ஜூன்.10 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...