ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை தள்ளுபடி செய்தது கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம்

காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலா்கள் குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்கரின் பேட்டியை எடுத்து வெளியிட்ட ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


கோவை: காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலா்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்ட புகாரின்பேரில் யூடியூபா் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பேட்டியை வெளியிட்டதற்காக ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனு மீதான விசாரணை கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயா முன்னிலையில் நேற்று ஜூன்.10 விசாரணைக்கு வந்தது.

ஃபெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.நிக்கோலஸ் ஆஜரானார். இந்த விசாரணையின் போது ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.விஜயா உத்தரவிட்டார்.

Newsletter

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...