இடையர்பாளையம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

இடையர்பாளையம், வடவள்ளி ரோடு, நீலியம்மன் நகரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஆன்லைன் சூதாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


கோவை: கோவை இடையர்பாளையம், வடவள்ளி ரோடு, நீலியம்மன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். தனியார் நிறுவன ஊழியரான இவர் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, ட்ரீம்-11 சூதாட்டத்தில் பணம் கட்டினார். இதில் வென்றால் முதல் பரிசு ரூ. 1 கோடி வரை கிடைக்கும். ஆனால் அவர் அதில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்தார்.

இதுதவிர முத்துக்குமார் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்திலும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாக தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று ஜூன்.10 வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர்.



பின்னர் இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது தற்கொலை செய்த முத்துக்குமார் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேற்கொண்டு இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...