வெளிநாடுகளுக்கு கோவையில் இருந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

2022ல் 1.61 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.57 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இதனால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகரில் அமைந்துள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.இந்த அலுவகத்தில் கடந்த ஆண்டு மட்டும் கடவுசீட்டு (பாஸ்போர்ட்) வேண்டும் என்று 1.83 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், மொத்தம் 1.77 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக இம்மையத்தின் பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ் இன்று ஜூன்.13 தெரிவித்துள்ளார்.

2008ல் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இத்தனை பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. 2022ல் 1.61 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.57 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.இதனால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்துவெளிநாடுகளுக்கு பறக்க வேண்டும் என்று விரும்புவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை காணமுடிகிறது.2023ல் சமர்ப்பிக்கப்பட்ட 30% விண்ணப்பங்கள் குன்னூர், ஈரோடு, சேலம், ராசிபுரம் தபால் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையம் மூலமாக வந்துள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...