கோவையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூன் 13 அன்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரி தமிழக அரசை கண்டித்தனர்.


கோவை: மாநிலத் தழுவிய மாவட்ட அளவிலான தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் இன்று ஜூன்.13 நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தமிழக அரசை கண்டித்தும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டமானது இன்று ஜூன்.13 நடைபெற்றது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு கடந்த ஆட்சியில் மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்பட்டது. அப்போது 80% முதல் 90% வரை மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலமாக ஆசிரியர்கள் பயனடைந்தனர். ஆனால் திமுக ஆட்சி அமைத்த பிறகு அதனை குறைத்து 30% முதல் 40% வரை மட்டுமே பயனடையும் வகையில் மாற்றி உள்ளனர்.

மேலும் United India Insurance நிறுவனம் மூலமாக காப்பீட்டு வழங்கி வந்த நிலையில் தற்போது அதனை MD India மற்றும் Medi Assist என்ற நிறுவனம் மூலம் குறைந்த அளவில் திமுக அரசு வழங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ஆசிரியர்களுக்கு கட்டணம் இல்லாத சிகிச்சை வழங்க வேண்டும் இல்லாவிட்டால் ஜூலை 17-ம் தேதி United India Insurance காப்பீட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக அரசை கண்டித்தும் மாபெரும் மாநிலம் அளவிலான போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...