காங்கேயத்தில் பிஏபி வாய்க்காலில் பாலத்தை இணைக்க முடியாமல் ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் திண்டாட்டம்

பிஏபி வாய்க்காலில் பழைய குழாய்களை புதிய பாலத்துடன் நேருக்கு நேர் இணைத்து தண்ணீர் முழுமையாக செல்ல வழிவகை செய்ய வேண்டும். பிஏபி வாய்க்காலில் இணைக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: காங்கேயம்-வெள்ளகோயில் தேசிய நெடுஞ்சாலையில் பிஏபி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் இருந்த குழாய்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய பாலம் கட்டப்படுவதாக விவசாயிகள் நினைத்திருந்த வேளையில் பாலம் கட்டும் பணி முடிவடையும் தருவாயில் வாய்க்காலில் பாலத்தை இணைக்க முடியாமல் ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.

கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் பிஏபி வாய்க்கால் நிர்வாகத்திடம், விவசாயிகள் போராடிவரும் நிலையில் நெடுஞ்சாலை துறையினர் மூலம் பாலம் கட்டி கொடுப்பார்கள் என்று நினைத்திருந்த வேளையில் அவர்களும் பழிவாங்குவதாக விவசாயிகள் ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளனர். முறைப்படி பாலத்தை வாய்க்காலில் இணைக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



காங்கேயம் வெள்ளகோவில் தேசிய நெடுஞ்சாலையில் பரப்பிக்குளம் ஆழியாறு பாசன (பிஏபி) வாய்க்காலை அடைத்து தண்ணீர் தடுக்கும் வகையில் புதிய பாலம் கட்டுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து பிஏபி வெள்ளகோவில் நீர் பாசன சங்க நிர்வாகிகள் கூறியதாவது, பல்லடம் முதல் கரூர் வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வெள்ளகோவில் வழியில் வீரணம் பாளையம் அருகில் பிஏபி வாய்க்கால் பாசனம் நீர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து மறுபுறம் செல்ல ஏற்கனவே குழாய் பாலம் உள்ளது.

தற்போது சாலை விரிவாக்கின் போது புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய பாலம் சிமெண்ட் குழாய்கள் இல்லாமல் அப்படியே தண்ணீர் செல்லும் வகையில் கட்டப்படுகிறது. புதிய பாலம் பழைய பாலத்தின் குழாய்களுடன் இணையும் இடத்தில் பாதி அடைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தடுக்கப்பட்டு மறுபுறம் செல்ல முடியாது. வாய்க்காலில் பழைய குழாய்களை புதிய பாலத்துடன் நேருக்கு நேர் இணைத்து தண்ணீர் முழுமையாக செல்ல வழிவகை செய்ய வேண்டும். தற்போது கட்டிய பாலத்தை அகற்றி விட்டு முற்றிலும் புதிய பாலம் கட்ட வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அப்படி இடித்துவிட்டு இப்பணியை செய்யவில்லை என்றால் விவசாயிகள் ஒன்று இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...