பொது இடங்களில் மாடு வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் - கோவை ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மனு

பக்ரீத் பண்டிகை நாளில் பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை தடுக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் மாடுகள் வதை செய்வதை தடுக்க கோரி வரும் 17.06.2024 அன்று பக்ரீத்-ஐ முன்னிட்டு கோவையில் செல்வபுரம், உக்கடம் ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இறைச்சிக்காக மாடுகள் பொது இடங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடங்களில் இது போலவே அரசு அனுமதி பெற்ற இறைச்சி கூடங்களை தவிர்த்து, பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டன. அரசின் சட்ட திட்டங்களுக்குப்பட்டு, கால்நடை மருத்துவரின் சான்றிதழ், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி கூடங்கள் மட்டும் பயன்படுத்துவது போன்ற விதிகளை பின்பற்றாமல் தொடர்ந்து மாடுகள் வெட்டப்படுவதாக அறிகிறோம்.



எனவே இதுபோன்ற நிகழ்வுகளை இந்த வருடமும் நடைபெறாமல், முன் கூட்டியே அரசும், காவல்துறையும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வஹிந்து பரிஷத்தின் பசு பாதுகாப்பு அமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...